கொரியா ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய மற்றும் ஊவா மாகாண மக்களின் சமூக மற்றும் பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 முதல் 2025 வரை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், அறுவடைக்குப் பின்னரான சேதங்களைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்காக இவ் நன்கொடை ஒதுக்கப்படவுள்ளது.