சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இவ்வழக்கானது இன்றையதினம் (10) விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான நாமல் பலல்ல முன்னிலையில் எடுத்துக் விசாரிக்கப்பட்டிருந்தது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, .சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதிவாதி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.