கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 06 பேர் மன்னார் பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொரச்சோலை, சேனாபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 515 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும், கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேலும் 511 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 36 வயதான பத்குளுஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் 25, 26, 34 மற்றும் 53 வயதுடைய கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் 506 கிராம் கொக்கேய்னுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.