இன்று இரவு வேளையில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும், தற்போது நிலவும் மழையுடனான காலநிலை ஓரளவு குறையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.