கோவிட் வைரஸ் முதலில் பதிவாகிய வுஹான் உட்பட சீனா முழுவதும் பல நகரங்கள் பூட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
வுஹானின் ஒரு மாவட்டத்தில் 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் அக்டோபர் 30 வரை வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையின் தாயகமான Zhengzhou நகரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நாடு முழுவதும் சுமார் 28 நகரங்கள் பூட்டுதல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன
வெளிநாட்டு ஊடகங்களின்படி, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதிக்கு பொறுப்பான பிராந்தியங்களில் சுமார் 207 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வுஹான் இந்த வாரம் ஒரு நாளைக்கு 25 புதிய நோய்த்தொற்றுகள் கண்ண்டறியப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு வாரங்களில் 200 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.