நாட்டில் சில நாட்களுக்காவது முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தியினை வெளியிட்டிருக்கின்றது.
எரிபொருளின் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத சூழ் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாது, மின்வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்களின் காரணமாக, நாட்டை சில தினங்களுக்காவது முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்களை மேற்கோள்காட்டி, தமிழ் மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.