கொழும்பு நகர மண்டபத்திலுள்ள சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
டீசல் இல்லாத காரணத்தினால் மக்கள் போராட்டங்களினை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் அறிவித்தார்.
போராட்டம் காரணமாக தாமரை தடாகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.