ஒரு நாடு என்ற வகையில், அனைத்து நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடன் கையாள்வதில் இலங்கை நட்புறவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தியத்தலாவ இராணுவ விஞ்ஞான பீடத்தின் கெடட்களின் 97 ஆவது அணிவகுப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி உலக வல்லரசுகளின் போராட்டங்களில் ஒரு குழுவாகப் பிரிந்து செல்லாமல் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையை சர்வதேச அரங்கில் நல்லதொரு நிலைக்கு உயர்த்த முடியும் என தெரிவித்தார்.
அத்தோடு, தியத்தலாவ இராணுவ விஞ்ஞானக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த 351 கெடட் அதிகாரிகள் அதிகார சபைக்கு நியமிக்கப்பட்டனர்.
மேலும், 4 வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் உத்தியோகத்தர்களும் பயிற்சி பெற்று அதிகாரம் பெற்றமை விசேட அம்சமாகும்.