கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உணவு விஷமாகி 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் பணிப்பெண்கள் எனவும் நேற்று காலை குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உணவை உண்ட குறித்த ஆடைத் தொழிலாளர்கள் சுகயீனம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நோய்வாய்ப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.