2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, மொபைல் போன் சிக்னல்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், உக்ரைன் தனது படைகள் நிலைகொண்டிருந்த இடம் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 89 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பின் போது அதிக எண்ணிக்கையிலான தனது வீரர்கள் இறந்ததாக ரஷ்யா ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறையாக கருதப்படுகின்றது.
அத்தோடு, இந்த தாக்குதலுக்கு உக்ரைன் சமீபத்தில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஹிமார்ஸ் ராக்கெட் அமைப்பை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன்படி, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கல்லூரியின் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அப்போது அங்கு ஏராளமான ரஷ்ய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், புத்தாண்டு விடியலுடன் ரஷ்ய துருப்புக்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதை அடுத்து, சிக்னல்களைப் பயன்படுத்தி உக்ரைன் இராணுவம் உரிய இலக்கை நோக்கி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமது இராணுவத்தினர் கையடக்கத் தொலைபேசிகளை தடை செய்தமையால் எதிரிகள் இலக்கை இலகுவாகக் கண்டுபிடித்து விட்டதாகவும், விசாரணை நடத்தி தொலைபேசிகளைப் பயன்படுத்திய படையினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, உயிரிழந்தவர்களில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய இராணுவப் படைப்பிரிவின் துணைத் தளபதி லெப்டினன்ட் கர்னல் பச்சுரினும் அடங்குவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் தனது ஏவுகணை தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 300 பேர் காயமடைந்ததாகவும் கூறுகிறது.