கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார்.
மேலும், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டார் எனவும் இதன்போது, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அப்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதில் தாக்குதலில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும், தெரிவித்தார்.