வெளிநாட்டில் வேலைக்காக செல்வதற்காக முகவர் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் போது அது தொடர்பான தகவல்களை முதலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் பணிபுரிய ஏஜென்சிகளுக்கு பணம் கொடுப்பதற்கு முன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 ஹாட்லைன் எண்ணில் உள்ள தகவல் மையத்தைத் தொடர்புகொண்டு, ஏஜென்சியின் சட்டபூர்வமான நன்பகத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதோடு தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்கும் பொதுமக்கள் சென்று பார்வையிடலாம் எனவும் அறிவித்துள்ளது.
அத்தோடு. துபாய்க்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி திருக்கோவில் பிரதேச இளைஞரிடமிருந்து 450,000 ரூபாவை பெற்றுக்கொண்ட சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனையின் போது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக மேலும்,தெரிவிக்கப்படுகின்றது.