உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ஓய்வுபெற்ற இராணுவ கேர்னல் டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இவ்வறிவித்தலை வழங்கினார்.
அத்தோடு, அடிப்படை உரிமை மனு தொடர்பில் திருத்தப்பட்ட மனுவை முன்வைக்க மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுமதி கோரிஇருந்ததன் அதன்படியில், திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க வரும் 18 ஆம் திகதி அழைக்க உத்தரவிடபட்டுள்ளது.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மனு அழைக்கப்பட்ட போது, சட்டத்தரணிகளான சுனில் வதகல, எரங்க குணசேகர, பாஃபரல் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பு சார்பில் சட்டத்தரணிகளும் ஆஜராகி, அதனை நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுவதால், இந்த நேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தலை நடத்துவதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளார்.