சீனாவினால் வழங்கப்பட்ட 4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடை துணி 20 கொள்கலன்கள் இன்று (13) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இந்த ஆண்டும் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படவுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள 70% பாடசாலை மாணவர்களின் சீருடைத் தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துடன் அவை இன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டன.