அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழில் வல்லுநர்கள் பலர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்படி, நியாயமற்ற வரிகளை நீக்கி வெளிப்படையான வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ,வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தப் போராட்டப் போராட்டத்தில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் பங்கேற்றார்கள் என்று அறிவிக்கப்பட்டுகின்றது.
மேலும், இலங்கை மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகளின் சங்கமும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி கட்டமைப்புகள் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டு திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு கடிதங்களை அனுப்பபியுள்ளார்கள்.