மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,
“அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து பல கச்சேரிகள் நடத்தி அதில் சம்பாதித்த பணத்தில், நம் நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிக்க லேப்டாப்களைகொள்வனவு செய்துள்ளதாகவும் கூடுதலாக, நாட்டில் உள்ள கோடீஸ்வரர்கள் குழுவும் எனக்கு மற்றொரு தொகுதி மடிக்கணினிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மேலும், அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஏராளமான ஆடைகளையும் வழங்கவுள்ளதாகவும் அவை அனைத்தும் கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதக்கவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நான் இப்போது பந்தங்கள் இல்லாத சுதந்திர மனிதனாக இருக்கிறேன். இந்த நன்கொடைகளை வறிய சிறுவர்களுக்கு பகிர்ந்தளித்து எதிர்காலத்தில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் ” ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து ஓமான் சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்று அதிகாலை 04.50 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-206 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.