அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் சடலம் வெள்ளை நிற வேன் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், Monterey Park இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வேனில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதன்படி, சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மான்டேரி பார்க் பகுதியானது ஆசியாவின் முக்கிய பகுதியாக கருதப்படுவராஜாவும் தெரிவிக்கப்படுகின்ற்து.
இச்சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளதோடு இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களுக்கு அமெரிக்க அரசின் ஆழ்ந்த இரங்கலையும் அமெரிக்க துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.