திஸ்ஸ, லுணுகம்வெஹெர நெற்செய்கையை பரிசோதிக்க விசேட குழுவொன்றை இன்று அப்பகுதிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் 25,000 ஏக்கர் நெற்பயிர்களில் நூற்புழு மற்றும் மஞ்சள் நோய் பரவியுள்ளதாக வர்த்தமானியில் வெளியான செய்தியின் அடிப்படையில், படலகொடவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்திடம் விசாரணை நடத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, நூற்புழு மற்றும் தண்டு மஞ்சள் நோய் காரணமாக திஸ்ஸ லுனுகம்வெஹரவில் 14,000 ஏக்கர் நெற்பயிர்களில் நெற்செய்கையை கைவிடுமாறு படலகொட ஆராய்ச்சி நிறுவனம் எவ்வித ஆலோசனையும் வழங்கவில்லை என தொடர்புடைய செய்தித்தாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதனை படலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த சேனாநாயக்க உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திஸ்ஸ லுணுகம்வெஹெர பகுதியில் சேதமடைந்த வயல்களை பார்வையிட அம்பலாந்தோட்டை நெல் உற்பத்தி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷனி உமா சிறிவர்தன தலைமையிலான விசேட குழுவொன்று அப்பகுதிக்கு அனுப்பப்படவுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.