முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று காலிமுகத்திடல் பிரதேசத்தில் சுதந்திர விழா நடைபெறும் இடத்தில் பொதுமக்களின் பெரும் பணத்தை செலவிட்டு சுதந்திர விழாவை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், சுதந்திர விழாவையொட்டி கட்டப்பட்டு வரும் தற்காலிக கட்டுமான பணிகளுக்காக நடப்பட்ட இரும்பு கம்பங்களில் கருப்பு நாடா கட்டி போராட்டம் நடத்தினர்.
ஆனால், போராட்டத்தை தொடர போலீசார் அனுமதிக்க்காமல் போராட்டக்காரர்களுக்கும் பொலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.