அமெரிக்காவின் FBI இன் முன்னாள் உயர் அதிகாரியான Charles McGonigal, FBI இன் நியூயார்க் கள அலுவலகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரரான Oleg Deripaska உடன் தொடர்பு வைத்து தடைகளை மீறியதாக குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்ற ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் எஃப்.பி.ஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சார்லஸ் மெக்கோனிகல், எஃப்.பி.ஐ.யின் முன்னாள் உயர் அதிகாரி மற்றும் நியூயார்க் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.