தேவையை நிர்வகித்து மின்சாரத்தை குறைக்குமாறு மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
மேலும், தேவை மேலாண்மை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலளித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் மின் தேவை முகாமைத்துவத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு மின்வெட்டு மூலம் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் எழுத்து மூலம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடான் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இது தொடர்பான முறைப்பாடுகளை 077 56 87 387 WhatsApp இலக்கம், 0112 39 26 41 தொலைநகல் இலக்கம் அல்லது consumers@pucsl.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.