கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டை இருப்புக்களை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறியும் நோக்கில் மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஜனவரி 21ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான 83 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வடமேற்கு மாகாணம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிகளவான சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.