மாகாண மட்டத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கிய விளையாட்டு சபைகளை நிறுவுவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், விளையாட்டு அமைச்சு மற்றும் அந்தத் திணைக்களம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சங்கங்கள், தேசிய இளைஞர் சேவை மன்றம், சிறு வணிகப் பிரிவு, இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் பங்கேற்புடன் கூட்டு அணுகுமுறையாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.
அத்தோடு, விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டு அதிகாரிகள், சிறு வியாபார அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என சுமார் ஐநூறு பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.