எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் அரசாங்க கணக்குகள் குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்
.
இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்கிழமை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அரசாங்க கணக்கு குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு கடந்த வருடங்கள் தொடர்பிலான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இதேவேளை, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம் எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.