
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் பிரதிவாதிக்கு 5,000 ரூபா அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் அயலிலுள்ள மைனர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதற்காக குறித்த பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அத்தோடு, நீண்ட விசாரணைக்குப் பிறகு குறித்த ற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதினைத் தொடர்ந்து குறித்த தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.