வெற்றிகரமான எதிர்காலத்தின் வாரிசுகளாக அனைவரும் ஒரே நாட்டில் பங்காளிகளாக செயற்பட வேண்டுமென பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வரலாறு நெடுக பின்னடைவுகளையும் மீள் எழுச்சியையும் அனுபவித்த ஒரு நாடாக எமது நாட்டை மீண்டும் ஒரு பெருமைமிக்க நாடாக மாற்றியமைக்க முடியும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரதமரின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.