தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் 99 வீதமான வேலைகள் முடிவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், விடைத்தாள்களில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றதா என்பதினை பரிசீலிக்க பல படிநிலைகளின் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் கணினிமயமாக்கும் பணி துவங்கும் எனவும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல பிரச்சினைகள் பதிவாகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அநீதி இழைக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் இருந்தால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் அவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்,
மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 2,894 நிலையங்களில் நடைபெற்ற இப்பரீட்சைக்கு முந்நூற்று முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் 17 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தின் பின்னர் உயர்தரப் பரீட்சை தொடர்பான கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையொப்பங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதோடு உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.