இந்த மாதம் சமூர்த்தி உதவித்தொகை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருமானத்தை ஈட்ட முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்த்துள்ளதோடு தற்போதைய சூழ்நிலை காரணமாக அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.