நித்யானந்தாவினுடைய கைலாசாவினை தனி நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து இன்று கையெழுத்திட்டிருக்கின்றது.
இதேவேளை , புதுடெல்லி பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களினை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருந்தமை மற்றும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவான நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவினை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.
மேலும், நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகமனது இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகின்றது.
இதன்படி, நியூ ஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரத்தினுடைய
மேயருக்கும் கைலாசாவினுடைய தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவிர்க்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாக்கியுள்ளது.