பொதுமக்களையும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களையும் பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முயற்சிப்பதாக எரிசக்தி ஆய்வாளர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவையின் ஊடாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்ததன் காரணமாக மக்களும் மாணவர்களும் பணயக் கைதிகளாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள விலைகளில் சிக்கல்கள் இருப்பதாக எரிசக்தி ஆய்வாளர் விதுர ரலபன மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், நேற்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.