2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை நிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த இரண்டு ஆண்டுகளுக்கான கடனை செலுத்துவதற்கான நீண்ட கால திட்டமொன்று நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த காலப்பகுதியில் நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் நிவாரணம் தொடர்பாக இலங்கையுடன் சிநேகபூர்வ கலந்தாலோசனையை மேற்கொள்ள Exim வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் கடனை நிலைநிறுத்துவதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க முயற்சிப்பதாக மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திற்கு கடனுதவி வழங்குவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக எக்ஸிம் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாக திருமதி மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தி, கூடிய விரைவில் கடனுதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ளும் இந்த நிலைமையை முறியடிப்பதற்கும் அதன் கடன் சுமையை குறைப்பதற்கும் சீனா தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கூட்டு மற்றும் சாதகமான பங்கை வகிக்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.