துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கஹ்ரமன்மராஸ் மற்றும் ஹடாய் மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியான பசார்சிக் பகுதிக்கும் அவர் செல்லவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, மோசமாக பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாத அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை. துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,957 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவில் எண்ணிக்கையை சரிபார்ப்பது கடினம், ஆனால் அங்குள்ள மாநில ஊடகங்களும் மீட்புக் குழுக்களும் சுமார் 2,500 பேர் இறந்ததாகத் தெரிவித்துள்ளது.