சப்ரகமுவ பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு (2020-2021) தவிர்ந்த ஏனைய வருடங்களின் மாணவர்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (16) மாலை 04.00 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவிற்கும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று ஏற்பட்ட மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, மோதலில் காயமடைந்த 09 மாணவர்களும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.