வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க வாக்கெடுப்பு இல்லை என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். .
மேலும், வாக்கெடுப்பு நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி இங்கு தெரிவித்ததோடு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது கருத்து தெரிவித்ததால் சபையில் சர்ச்சையான சூழ்நிலை உருவானது.
அத்தோடு, வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதியின் உரைக்கு பின்னர், தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.