இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை முட்டைகள் அனுப்பப்பட்டதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டியில் இன்று செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த முன்னாள் விவசாயப் பணிப்பாளர் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இந்தியாவில் முட்டையின் விலை வேகமாக குறைந்து வருவதால், குறைந்த விலையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள் கையிருப்புக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை எனவும் முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளதோடு , அரசு சான்றிதழ் அளிக்கும் வரை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை இருப்புகளை உட்கொள்வது பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.