தேராவில் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள்கள் இன்றைய தினம் கிடைக்காமையானது தங்களுடைய தவறுதான் என்று முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்காக நடத்தப்படும் மாகாணமட்ட பரிட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் தான் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் 11 மற்றும் 10 ஆம் தரம் மாணவர்களுக்காக மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள்கள் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சமயம் மற்றும் சுகாதாரம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சை வினாத்தாள்களை கல்வி வலயத்தினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டு இன்றைய தினம் பரீட்சைகள் நடைபெற்றிருக்கின்றான.
ஆனால் தேராவில் வித்தியாலயத்திற்காக பரீட்சை வினாத்தாள்கள் அனுப்பப்ப்பிவைக்கப்படாத நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியகிடைக்கின்றது.
அதாவது அதிகாரிகளினது அலட்சிய நிலையினாலையே இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த நிலையில் இவ்விடயங்கள் தொடர்பாக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பபினை மேற்கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தங்களால் இடம்பெற்ற தவறு தான் என்றும், அந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் வேறு பாடசாலையின் பரீட்சை வினாத்தாள்களை பெற்று போட்டோ பிரதி செய்து வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய மின்சார துண்டிப்பு மற்றும் போட்டோ பிரதி எடுப்பதற்கான தாள்களின் விலையேற்றம் என்பவற்றினால் தாம் பாதிக்கப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் இருந்து கிட்டத்தட்ட பத்து பதினைந்து கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தான் குறித்த போட்டோ பிரதிகளையும் தாம் பெற்றுக் கொண்டாதாவதாகவும் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டார்கள் .
இவ்வாறு பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்ற்படுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பதாகக் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.