சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டமூலங்களுக்கு தனது கையொப்பத்தினை பதிவு செய்துள்ளார்.
குறித்த சட்டமூலங்களில் நேற்று சபாநாயகர் தனது சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தம், இறுதி உயில் திருத்தம், மோசடி தடுப்பு திருத்தம் ஆகிய மூன்று சட்டமூலங்களுக்கும் சபாநாயகர் தனது ஒப்பத்தினை பதிவு செய்துள்ளார்.
இதன்படி, குறித்த மூன்று திருத்தச் சட்டமூலங்களும் அமுலுக்கு வருவதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.