யால தேசிய பூங்காவில் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்தியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை செலுத்திய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யால பூங்காவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலும் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.