வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சபாரி சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை தேடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது வடமாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் விலங்குகளை கற்கவும் பொழுதுபோக்குக்காகவும் எந்தவிதான தனியான சஃபாரி சரணாலயம் அமைக்கப்படவில்லை என்பதினால் இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளார்.
பெரும்பாலான சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் தெற்கில் அமைந்துள்ளதால், வடமாகாணத்தின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தெற்கில் உள்ள மிருகக்காட்சிசாலைகளைப் பார்வையிட வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.