பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு, இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்தியதால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
மேலும் சந்தேக நபர் இது வெறும் தனது சொந்த திட்டம் என்றும், அரசியல் அல்லது மத தலையீடு இல்லை என்றும், எந்த பயங்கரவாத குழுவின் தொடர்பும் இல்லை என்றும் சந்தேக நபர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இப்பேரணியானது இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ. கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் இம்ரான் கான் மேடையில் கட்சியின் ஆதரவாளர்களிடம் உரையாற்றிய போதே குறித்த துப்பக்ககிச் சூடு இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச் சூடு காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என பிடிஐ கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஜோஷா கட்சியின் நான்கு தலைவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்குபற்றியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், எந்தவொரு தரப்பினரும் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் அரசு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி இந்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.