கொழும்பு தாமரை கோபுரத்தின் காரணமாக இன்று இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு கிடைத்துள்ளது. கொழும்பு நெலும் பொக்குன வளாகத்தில் நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் சிங்கப்பூரின் Create Design Pvt. Ltd மற்றும் Colombo Nelum Kuluna Management Pvt. Ltd ஆகியவற்றுக்கு இடையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படும் என நெலும் நெலும் பொக்குன முகாமைத்துவ தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, மாபெரும் பிரமாண்டமான “வைக்கிங் மாஸ்” என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அதாவது 650 சுற்றுலா பயணிகள். மேலும், இந்தக் கப்பலுடன் 450 பணியாளர்களும் இலங்கை வந்தனர். கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த மிகப்பெரிய கப்பல் இதுவாகும்.
இந்தக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மத்திய கிழக்கு மற்றும் இந்தியா வழியாக இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. அந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, காலி, பின்னவல ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். இந்த கப்பல் நாளை மாலை 6.30 மணிக்கு மலேசியா செல்ல உள்ளது.