இந்த நாட்டின் சுகாதார அமைப்புக்கு அத்தியாவசியமான 43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொரிய அரசாங்கம் மற்றும் மக்களின் ஆதரவுடன் இன்று (17) சுகாதார அமைச்சுக்கு வழங்கி வைக்கப்பட்து.
மேலும், கொரிய நிறுவனமான குளோபல் லைஃப் ஷேரிங் இன்ஸ்டிட்யூட், உலக அன்ரீச்டு பீப்பிள் மிஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுடன் சேகரிக்கப்பட்ட நன்கொடைகள், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று சுகாதார அமைச்சில் இலங்கையின் பணிப்பாளரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதன்படி, பல கட்டங்களாக வழங்கப்பட உள்ள இந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களில் முதல் நன்கொடையாக 43 கோடி ரூபாய் நன்கொடையாக கண் நோய்கள், பாக்டீரியா தொற்று, தோல் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
அத்தோடு,உலகளாவிய கொவிட் அனர்த்தத்தின் போதும், நாட்டில் தற்போது நிலவும் சவாலான சூழலிலும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாரியளவு ஆதரவை வழங்கியுள்ளதாகவும், தற்போதும் அதனைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும், தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மருந்துகளும் வழங்கப்படவுள்ளதாக ஆயர் ஏ.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.