இந்த வருடத்தில் 47,353 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குழு நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த காலங்களில் ரஷ்யாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை 12,064 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பிரித்தானியாவில் இருந்து 3,862 பேரும், ஜேர்மனியில் இருந்து 3,945 பேரும், இந்தியாவில் இருந்து 5,838 பேரும், பிரான்சிலிருந்து 2,241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.