தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கடந்த 25ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து தேர்தல் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய சார்லஸின் ராஜினாமா ஏற்கப்படுமா? இல்லை? என எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.