ஜானக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர் ஜனக ரத்நாயக்க அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பிய கடிதம் ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து அவரது விருப்பத்திற்கேற்ப அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்தோடு, மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் திறன் மின்சார சபைக்கு உண்டு எனவும் அவ்வாறு செயற்படமாட்டார்கள் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்படும் விதம் முழு நாட்டையும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், மின்சார சபைக்கு வழங்கப்பட்ட எரிபொருளுக்காக 112 பில்லியன் ரூபாவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.