மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார்.
மேலும். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவை நட்பு நாடுகளாக நினைவு கூர்ந்து ஜெனரல் சஹீர் ஷம்ஷாத் மிர்சா மற்றும் அவரது குழுவினர் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.