இலங்கைக்கான சாதகமற்ற சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் காரணமாக ஜப்பானின் வர்த்தகத் துறையில் முன்னணி வர்த்தக நாமமான Mitsubishi எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை, இலகு ரயில் திட்டம், இயற்கை திரவ வாயுத் திட்டம் உள்ளிட்ட ஜப்பானின் புதிய திட்ட முன்மொழிவுகளை திடீரென ரத்து செய்தமையும் இதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, Mitsubishi என்பது 60 வருடங்களாக இலங்கையில் இயங்கி வரும் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாகும்.
மேலும், மிட்சுபிஷி வெளிநாடுகளில் திறக்கப்பட்ட முதல் அலுவலகங்களில் இலங்கையும் ஒன்றாகும் என்பதோடு இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளிலும் இந்நிறுவனம் முக்கிய பங்காளியாக மாறியுள்ளது.
இதன்படைய, இலங்கையில் சில உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பங்களித்த ஜெயிக்காவின் சில திட்டங்களில் மிட்சுபிஷி ஒரு முக்கிய பங்குதாரராக இருந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவியது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.