அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் சுமார் 150 வகையான மருந்துகளுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சுகாதார அமைச்சினால் தேவையான பல மருந்துப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க முடியவில்லை எனவும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கும் இயலவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியவசிய சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அண்மையில் எடுத்த தீர்மானம் தொடர்பிலும் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து வெளியிட்டார்.