உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க செய்தியாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்து மார்ச் 9 ஆம் திகதிக்கு முன் அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்தது.
அத்தோடு, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.