இலங்கையில் சர்வதேச மட்டத்தில் பயிற்சி பெற்ற வைத்தியர்களின் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிப்பதே தனது எதிர்கால இலக்கு என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் மருத்துவ குழுவின் உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட கலாநிதி தரங்க அருக்கொட தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் மருத்துவக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் நபர் கலாநிதி தரங்க அருக்கொட ஆவார் என்பதோடு இலங்கைக்கு கிடைத்த இந்த வாய்ப்பு சிறப்பான சாதனையாகும் என கலாநிதி தரங்க அருக்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.